வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மாபெரும் தீச்சட்டி போராட்ட பேரணியொன்று கிளிநொச்சியில் 20/02/2025 நடைபெற்றது.

2922 நாட்கள் கண்ணீரில் கழிந்தன
நீதிக்காக இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்ற
( வியாழக்கிழமை காலை )கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றலிலிருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது,
இதன் பொழுது காணாமலாக்கபட்ட உறவுகளின் நீதியை வேண்டி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் கற்பூர சட்டியை ஏந்திய வண்ணம் எங்கே எங்கே உறவுகள் எங்கே !கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே! ஓஎம்பியும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம் முள்ளிவாய்க்காலில் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே !வெளியேறு வெளியேறுஓஎம்பியே வெளியேறு ! மரண சான்றிதழ் வேண்டாம்! விசாரணையும் வேண்டாம் !வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் ! வட்டு வாகலில் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே! சர்வதேச விசாரணை வேண்டும்! ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி பழைய பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்ன முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டு தங்களுடைய போராட்டத்தினை நிறைவுக்கு கொண்டு வந்தனர் .
இதேவேளை அதிகளவு புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகளை காணொளி படமெடுத்து மற்றும் கண்காணித்து உளரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது .
இதேவேளை தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.







